இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப் பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.
எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட
மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
- என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும் என்று சொன்னார்களாம்.
அப்படி இல்லை என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:
சிலர் பெருமையில் தொட்டு
எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர்
தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு
எழுதுகிறார்கள்.
ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை
ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை.
இப்படி அருமையான ஒரு சிந்தனையை நினைவில் கொண்டு இனிய ஆங்கில புத்தாண்டில் கால் எடுத்து வைப்போம். வாருங்கள் நண்பர்களே!
*******************நன்றி, மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.**************