Pages

Monday, March 11, 2013

எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம். பாகம் 3

       
    தொடர்ந்து எனது கதையை படித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய வணக்கம். இதுவரை படிக்காதவர்கள் பாகம்1 பாகம்2 இங்கு சென்று படிக்கவும். தொடர்ந்து வருகைத்தந்து என்னை ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. 

    இந்த தொடர்கதையைப் படிக்க தொடர்ந்து நிறையப்பேர் வருகைத் தந்திருக்கிறார்கள் என்பதை பார்த்தாபோது மனதில் சொல்லமுடியாத மகிழ்ச்சி! அதனால்தான் கடினமான வேலைப்பளுவிலும் இந்த தொடர்கதையை தொடர்ந்து எழுதுகிறேன்.

சுரேஷ்க்கு அப்படியே அவளை கட்டிபிடித்து அழனும்போல் தோன்றியது, எதுவோ தடுக்க கையேடு கையை பிசைந்துகொண்டு இருக்கையில் உட்கார்ந்திருந்தான், ஆனால் சந்தியா தனது குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு அவனது தோலில் வந்து சாய்ந்துக்கொண்டாள்.

பாகம் 3
 "என்னை மன்னிச்சிடுங்க மாமா  நான் உங்களுக்காக காத்திருந்திருக்கணும், எனது சூழ்நிலை முடியாமல் போய்விட்டது என்று தலை நிமிர்ந்தாள் வாழ்க்கை என்றால் எப்படியெல்லாம் இருக்கும் என்று ஒரு பெரிய கனவோடு காத்திருந்தேன்.உங்களிடம் பல விஷயங்களை சொல்லிருக்கிறேன் இப்படிதான் வாழனும் என்று உங்ககூட சண்டை போட்டிருக்கேன் கடைசியில் எனக்கு கிடைத்தது வெறுமையே..., நான் சிரிச்சிப்பேசி எவ்வளவு நாட்கள் ஆகிறது தெரியுமா? நம் காதலோடு சேர்ந்து எனது சிரிப்பும் சந்தோசமும் செத்துப்போச்சி."

கண்ணீரோடு மீண்டும் தொடர்ந்தாள்....!

" நீங்க எனக்கு வைத்த பட்டப்பெயர் "வாயாடி" இப்பலாம் நான் பேசுவதே கிடையாது அப்படியே பேசினாலும் கேட்க யார் இருக்கா? அம்மா வீட்டுக்கு வரும் இரண்டு நாட்கள்தான் கோவிலுக்கு போவதைப்போல் தோன்றும். எனது உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள யாருமே இல்லை, அம்மாவிடம் சொன்னால் நீ என்ன மகாராணியா? நாங்களும் இப்படிதான் வாழ்ந்தோம் என்று ஒரு வார்த்தையில் என் வாயை அடைத்துவிடுவார்கள். அவங்க அண்ணன் மகனாச்சே அவங்க யாருக்குத்தான் சப்போர்ட் செய்வாங்க?. அவர் சொல்வதைத்தான் செய்யனும், அவர் சொல்வதைத்தான் கேட்கனும்  உண்மையைச் சொல்லப்போனால் நான் உயிருள்ள ஒரு பொம்மை அவ்ளோதான்."

"இதை கேட்ட சுரேஷ் ஒன்றும் பேசமுடியாமல் மௌனமாகவே மனதில் மட்டுமே அழுதுகொண்டு மீண்டும் அவள் சொல்வதைக் கேட்க தயாரானான் ."

"இன்னும் கொடுமையான விஷயம் என்னன்னா, காலையில் எழுந்து தலை சீவி பொட்டுவைக்ககூடாது, சீவி மினுக்கிகிட்டு யாரடி பார்க்கப் போற? என்று கேட்பார், எங்கயாவது ஊருக்கு போனால்கூட நல்ல புடவையை உடுத்தமுடியாது, அதற்கும் பல கேள்விகள் வரும். எப்படித்தான் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தாலும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிப்பார். கொஞ்ச நாட்களுக்கு பிறகுதான் எல்லாம் புரிந்தது சமையலில் ஒரு குறையும் இல்லை என்னை அடிப்பதற்காகவே குறையை தேடுகிறார். தினமும் குடிதான் அந்த சாராய நாற்றமே என்னை வாந்தி எடுக்க வைத்துவிடும். இதுதான் என் வாழ்க்கை ..........
 நான்  ரொம்ப நல்லா வாழ்கிறேன் மாமா.....(என்று வாய்விட்டு அழ...) சுரேஷ்க்கு அங்கு உட்கார்ந்திருக்கவே முடியவில்லை, எழுந்து கதவின் அருகில் நின்று அழுதான்.

"சந்தியா....!"
(அடுப்பங்கறையில் இருந்து அம்மா அழைக்க....)

"இதோ வரேம்மா, என்று சந்தியா எழுந்து போனாள்."

"சுரேஷ்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, எப்படி அவளுக்கு  சமாதானம் சொல்வதென்றும் புரிவவில்லை, அருகில் அவளுடைய பெரிய மகன் வர, அவனை அழைத்துச் சென்று கொண்டுவந்த பொருட்களை அவன் கையில் கொடுத்துவிட்டு யாரிடமும் சொல்லாமலேயே புறப்பட்டான். போகும் முன் தனது மொபைல் போனையும் ஆப் செய்திருந்தான்."

வண்டியின்  சப்தம் கேட்க, சந்தியா ஓடி வந்தாள் அதற்குள் மறைந்துவிட்டான் போனில் முயன்றும் "ஸ்வீட் ஆப்" என்று வந்தது. அப்படியே மனம் கனத்தபடி ஒன்றும் புரியாமல் நின்ற இடத்திலேயே உட்க்கார்ந்தாள்.  அப்போதுதான் தனது மகன் கையில் இருக்கும் பொருட்களைப் பார்த்தால், துபையில் இருந்து பிள்ளைகளுக்காக சில விளையாட்டு பொருட்களும், அவளுக்காக ஒரு மோதிரமும், மல்லிகைப்பூ மற்றும் பழங்களும் இருந்தது.  அதை கையில் எடுத்துக்கொண்டு அழுதுகொண்டே அந்த இடத்திலேயே படுத்துவிட்டாள்.

"மனவேதனையோடு புறப்பட்ட சுரேஷ், காதலித்தபோது அதிகநேரம் செலவழித்த ஒரு பூங்காவின் அருகில் சென்று நிறுத்தினான். பழைய நினைவுகளோடு அதே மரத்தடியில் அமர்ந்தான், அந்த மரத்தின் சில்லென்ற காற்று இவர்களின் பழைய கதையை பக்கம் பக்கமாக சொன்னது.மூன்று மணி நேரத்திற்கு பிறகு மலைக் கதிரவன் மயங்கும் நேரமானதும் பூங்காவின் துப்பரவாளர் வந்து, சார்! நேரம்மாச்சி சார் புறப்படுங்க என்று சொல்ல... தனது பழைய நினைவுகளில் இருந்து மீண்டான்.

கொஞ்சம் மனப்பாரம் குறைந்திருந்தது. "இதுவும் கடந்து போகும்" என்று தைரியத்தை வரவைத்துக்கொண்டு தனது போன்க்கு உயிர் கொடுத்தான். உடனே அழைப்பு வந்தது, சந்தியாதான் ...

"ஹலோ!"

"மாமா, உங்களை வீட்டுக்கு வரவைத்து  ஒருவேளை சாப்பாடுகூட போடாமல் எனது கதைகளைச் சொல்லி கஷ்டப்படுத்திவிட்டேன். மன்னிச்சிடுங்க.. மனசுல கிடப்பதை உங்ககிட்ட அப்படியே சொல்லணும் என்று தோன்றியது, உங்களை இழந்ததினால் எனக்கு கிடைத்த தண்டனை இதுதான் என்றெல்லாம் சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும் என்றுதான் சொன்னேன். "

" மன்னிக்கனும் சந்தியா, நீ சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை, இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் உங்க அம்மாகிட்ட சண்டைக்கு போயிருப்பேன். இப்ப என்னால் உனக்கு எந்த ஆருதலும் சொல்லமுடியாது, அப்படியே சொன்னாலும் அது உன் காயத்துக்கு மருந்தாக இருக்காது. எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் அவர் மாறுவார். அவரை மாற்றவேண்டியது உன் கையில்தான் இருக்கிறது. முதலில் என்னோடு அவரை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிடு! அதனால்தான் இன்னும் நீ மனதளவில் பாதிக்கபடுகிறாய். நீ என்னை காதலிக்கவில்லை என்றால் இப்படிப்பட்ட  ஆண்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணமே வந்திருக்காது, அதுமட்டுமில்லை 'ஒவ்வொன்றையும் மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுதுதான் "இக்கரைக்கு அக்கரை பச்சை!" என்ற எண்ணம்  தோன்றும்.' இல்லை என்றால் இதுதான் நமக்கு கிடைத்த வாழ்க்கை என்று வாழ கற்றுக்கொள்வோம்."

"ம்ம்ம்ம்..."


"இப்போது உனக்கு திருமணம் முடிந்துவிட்டது, உன்னிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லை, உனக்காக நான் யாரிடமும் எதுவும் பேசமுடியாது, அப்படி பேசினால் அதற்கு பெயர் வேறு! என்று சமுதாயம் முத்திரை குத்திவிடும். நம்மளைவிட மோசமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார் இந்த வாழ்க்கையே பெருமையாகத் தெரியும். அவர் முரட்டு குணமுடையவர் என்றாலும் இதுவரை உனக்கும் குழந்தைக்கும் தேவையானதை வாங்கி கொடுத்திருக்கார். உங்களை பட்டினி போட்டதில்லை, எப்படியாவது எந்த வேலைக்காவது போகிறார். இல்லையா?"

"ஆமாம் மாமா, அதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் போய்டுவார்."

"இப்போதுகூட உங்க நலன் கருதிதான் வெளிநாடுவரை சம்பாதிக்க சென்றிருக்கிறார். அவருக்குள்ளும் நல்ல குணங்கள் இருக்கிறது. உன்னை சீவி மினுக்கவேண்டாம் என்று சொல்வதும், நல்ல துணிமணி கட்டவேண்டாம் என்று சொல்வதும் உன்மேல் உள்ள சந்தேகத்தால் இல்லை, அது ஒருவிதமான பாசம், உன்னை யாருக்கும் விட்டுகொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை, யாரும் உன்னைப்பார்த்து எதுவும் சொல்லிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அவரின் பாசத்தை மென்மையாக வெளிப்படுத்தத் தெரியவில்லை, ஒரு விதமான பிடிவாதக்குணம் கூட சேர்வதால் அதட்டலாகவே உனக்கு தெரிகிறது. அப்படி உன்மேல் அவருக்கு சந்தேகம் இருந்திருந்தால் உன்னை தனியாக விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு பொழப்பை தேடி போயிருக்கமாட்டார். இங்கு கிடைக்கும் வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டு உன்னுடனே இருந்திருப்பார். இதைவிட இன்னும் நல்லபடியாக வாழனும் அதற்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார். "

"ம்ம்ம்..."

" நீ அவரிடம் சிரித்து பேசாததும் உன்னுடைய தவறுதான். அவர் கோபபட்டால் உனக்கென்ன நீ எப்போதும்போல் சிரித்து பேசு, அவர் அடிக்க வந்தால் நீ சிரித்துக்கொண்டே அவரை கட்டிபிடித்துக்கொள். இப்போது வெளிநாட்டில் இருப்பதால் அதிக பாசத்துடன் அவரிடம் பேசு, அவரின் உடல்நலனில் அக்கரை எடுத்துக்கொள் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவார்."

"சரிங்க மாமா, இப்போதுதான் சில விஷயங்கள் புரிகிறது, நானும் வாழ்க்கை நாம் நினைத்த மாதிரி அமையவில்லையே என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளும் வெறுப்பாகத்தான் பெசிருக்கிறேன். எப்பவும் எதையோ இழந்ததைபோல், இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடியிருக்கிறேன். முழு கவனத்தையும் அவர்மீது காட்டவில்லை என்பதுவும் உண்மைதான்."

"ம்ம்ம், அவர் மட்டும் உன்னிடம் நிறைகளை விட்டுவிட்டு குறைகளை கண்டு பிடிக்கவில்லை, நீயும்தான் அவரின் நிறைகளை விட்டுவிட்டு குறைகளை மட்டும் கண்டிருக்கிறாய். இனிவரும் காலம் அவரின்மீது கொஞ்சம் கவனமாக இருக்கவும். நான் உன்னைப் பார்த்துவிட்டேன் இனி பார்க்க வரமாட்டேன். நான் உன் கண் முன்னால் வந்தால் உன் நினைப்பு என்னைவிட்டுப் போகாது. என்னையும் மாற்றிவிடுவாய். நாம் இருவரும் காதலர்கள் இல்லை, நண்பர்கள், உறவினர் என்பது மட்டும்தான் உனது எண்ணத்தில் இருக்கவேண்டும். அப்படி நீ மாறும்போது கண்டிப்பாக நான் எப்போதும்போல் உன்னைப் பார்க்க வருவேன். ஒரு நண்பனாக வாழ்க்கையில் முன்னேற உதவி செய்வேன். அதுவும் நேரிடையாக இல்லை வேறு யார் மூலமாகத்தான் இருக்கும். இனிமேலும் அவருக்கு என்னால் ஒரு சந்தேகம் வரக்கூடாது."

"ம்."

"என்ன.... ம்?, வாய் திறந்து பேசு, நீ இப்போது சின்னப்பிள்ளை இல்லை, உனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சில நேரம் என்னைவிட நிதானமாக இருக்கிறாய். சிலநேரம் நானும் ஒரு சாதாரண பெண்தானே என்று நிருபித்துவிடுகிறாய். சரி அத்தைகிட்ட நான் இப்போது பேசியதை எல்லாம் சொல்லிடு, அவங்க நான் சாப்பிடாமல் வந்ததை கண்டு ஏதாவது நினைப்பாங்க, மேலும் அவங்கமேல் எந்தவிதமான கோபமும் இல்லை என்றும் சொல்லிவிடவும். நடப்பதெல்லாம் நமது விதி, யாரையும் குறைகூறி ஒன்னும் கிடைக்கப்போவதில்லை. "

"அம்மாவும் அருகில்தான் கேட்டுகிட்டு இருக்காங்க, இருந்தாலும் நீங்க சாப்பிடாமல் போனது கஷ்டமாக இருக்கிறது. அம்மா உங்ககிட்ட பேசணும் என்று சொல்றாங்க மாமா."

"ம்ம்ம் கொடு"

"தம்பி நான்தான் இது எல்லாத்துக்கும் காரணம், அண்ணன்மேல் உள்ள பாசத்தால் இப்படி செய்துவிட்டேன் என்னை மன்னிச்சிடுப்பா, இவ்ளோ நாள் கழித்து வந்தாலும் புள்ளைக்கு இவ்ளோ அறிவுரைகளை சொல்லி அவளுக்கு புரிய வச்சிருக்க. எனக்குதான் உன் மாமியாராக வரும் பாக்கியம் இல்லை, எனக்கு இன்னொரு பொண்ணும் இல்லை உனக்கு கட்டி கொடுக்க . சரிப்பா அப்பா அம்மாவை கேட்டதாக சொல்லு, உன் குணத்திற்கு நல்ல பொண்ணாக அமையும். கல்யாணத்துக்கு வந்து கூபிடுப்பா."

"ம்ம்ம் சரிங்க அத்தை. பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசவேண்டாம் எல்லோரையும் கேட்டதாக சொல்கிறேன் அத்தை."

"சரிப்பா இந்தா சந்தியாகிட்ட பேசு"

"ம்ம்ம் கொடுங்க."

"மாமா, இப்ப எங்க இருக்கீங்க?"

"நாம் நிறைய பேசி சிரித்த இடத்தில்...!"

"அந்த பூங்காவிலா? நினைச்சேன் போகும் வழியில்தான் இருக்கிறதே எப்படியும் அங்க போகாமல் போகமாட்டீங்கன்னு நினைச்சேன். இருந்தாலும் சாப்பிடாமல் போனது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. மோதிரம் ரொம்ப பிடிச்சிருக்கு மாமா எனக்காக வாங்கியதா?"

"ம்ம்ம் உனக்காக வாங்கியதுதான், எனது சம்பாத்தியத்தில் உனக்கு காதல் பரிசாக வாங்கி கொடுத்தனுப்ப நினைத்தேன் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது இது காதல் பரிசு இல்லை, உனது கல்யாணப்பரிசு."

"ம்ம்ம் எப்படி இருந்தாலும் இது உங்க நினைவு பரிசு எப்பவும் என் கையில் இருக்கும்."

"ம்ம்ம் எப்படியோ வைத்துக்கொள் பிறகு இதன் பெயரில் அவரிடம் அடிவாங்காமல் இருந்தால் சரிதான். நான் சொன்னதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள் எக்காரணம் கொண்டும் நமது காதல் அசிங்கப்பட்டு விடக்கூடாது, அழிந்துவிட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. சரி நேரமாச்சி நான் வீட்டுக்கு போறேன்."

"ம்ம்ம் சரிங்க மாமா, கண்டிப்பாக நாம் நல்ல உறவினர்களாகவும், நண்பர்களாகவும் இருப்போம். இத்தினை நாட்களாக யார் யாரோ! என்ன என்னவோ! அறிவுரைகள் சொன்னாங்க என் காதில் விழவேயில்லை, ஆனால் நீங்க இன்னைக்கு சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஆணி அடித்ததைப்போல் என் மனதில் பதிந்துவிட்டது. இப்பவும் உங்களை நினைத்தால் உங்களை காதலித்ததை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. "

"எனக்கும்தான், இருந்தாலும் அடிக்கடி வெளியில் சொல்லிக்கொள்வதும் சரியில்லை, ஓகே பை நான் புறப்படுகிறேன். பிறகு நேரம் கிடைக்கும்போது போன் செய்கிறேன்."

"ஓகே மாமா, இருட்டுல பார்த்து போங்க."

போன் இணைப்பை துண்டித்துக்கொண்டு சுரேஷ் வீட்டுக்கு புறப்பட்டான். போகும்போது கொஞ்சம் தற்பெருமையாக இருந்தது. எப்படி இப்படியெல்லாம் பேசினோம் என்று அவனுக்கே அவனை ஆச்சர்யாமாக இருந்தது. ஆனால் உள் மனது சொன்னது "ரொம்ப நல்லவன்டா நீ!"

"வீட்டுக்கு வந்ததும் அம்மா எங்கடா போன? போன் ஸ்வீட் ஆப் என்று சொன்னது?"

"நண்பர்களை பார்க்க போயிருந்தேன், சார்ஜ் இல்லைம்மா, என்று சொல்லி எப்படியோ சமாளித்தான்."

"ம்ம்ம், சரி நீ முதன்முதலில் ஒரு பொண்ணை பார்த்துட்டு வந்தியே, நம்ம சொந்தத்தில் ஒரு பொண்ணு அவங்க வந்திருந்தாங்க, பொண்ணை கொடுக்க விருப்பமாம் உன்னுடைய ஜாதகத்தை வாங்கிகிட்டு போயிருக்காங்க, நாளைக்கு என்னையும் உங்க அப்பாவையும் கூப்பிட்டு இருக்காங்க, அப்படியே ஜாதகம் பார்த்து சரியாக இருந்தால் என்னைக்கு "நிச்சயதார்த்தம்" என்றும் முடிவு செய்துவிடலாம் என்று சொல்லிருக்காங்க, நாங்களும் நாளைக்கு போறோம். உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்குத்தானே?"

 "அதுக்குள்ள எதுக்கும்மா அவசரம், பொண்ணு கொஞ்சம் ஒல்லியாதான் இருந்தது படிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் பொண்ணை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துவது தவறும்மா."

"அந்த பொண்ணு ஒத்துகிட்டபிறகுதான் அவங்க அப்பாவே இங்கு வந்திருந்தார், உனக்கும் லீவு குறைவு என்று சொன்னியே அதனால் இந்த பொண்ணு ஜாதகம் சரியாக வந்தால் முடித்துவிடலாம் என்று நினைக்கிறோம்."

"அம்மா, நீங்க ஜாதகம் பாருங்க, சரியாக வந்தால் சொல்லுங்க, அதன் பிறகு நான் அந்த பொண்ணிடம் கொஞ்சம் தனியாக பேசிய பிறகே முடிவு சொல்வேன்."

"ம்ம்ம் சரி ,சாப்பிட்டுவிட்டு போய் தூங்கு, நாளைக்கு காலையிலையே நாங்க போய்டுவோம்.

" ம்ம்ம் சரிம்மா குட் நைட்."

மறுநாள் ஜாதகம் சரியாக இருக்க, சுரேஷின் அப்பா அம்மாவுக்கும் விருப்பம் இருந்தது அதனால் நிச்சயதார்த்த தேதியையும் அங்கேயே முடிவு செய்தனர். சும்மா ஒரு கண் துடைப்பிற்காக சுரேஷ் நீ போயி அந்த பொண்ணுகிட்ட பேசணும் என்றால் பேசிவிட்டு வா  இன்று மதியம் அவ கம்ப்யூட்டர் கிளாஸ் வருவாள் அப்போது நீ அங்கு வருவதாக சொல்லிருக்கிறேன் என்று சொன்னார்கள். அவர்கள் வீட்டிலும் மாப்பிள்ளை எது கேட்டாலும் சரி என்று சொல்லிடு, பிடிச்சிருக்கா என்றால் பிடித்திருக்கிறது என்று சொல். இப்படியெல்லாம் சொல்லி அனுப்பிருந்தார்கள். தனியாக சந்தித்ததில் பெருசா எதுவும் பேசமுடியவில்லை. சுரேஷ் எது சொன்னாலும் சரிங்க,சரிங்க  என்று தலையாட்டும் பொம்மையாக இருந்தாள். இவனும் சரி அமைதியானவள் நம் தலையில் இவள்தான் என்று எழுதி வைத்திருந்தால் என்ன செய்வது என்று ஓகே சொல்லிவிட்டு புறப்பட்டான்.

அடுத்தநாள் உஷாவுக்கும், சுரேஷ்க்கும் திருமண நிச்சயதார்த்தாம் நடக்க இருப்பதாக உறவினர்கள் அனைவர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

***************************************************************************

சந்தியா என்ன சொன்னாள்? ப்ரியா என்ன ஆனாள்? சொந்தத்தில் உள்ள அக்கா பொண்ணு என்ன ஆனது? உஷா சுரேஷ் நிச்சயதார்த்தம் எப்படி நடைபெறுகிறது? அனைத்தும் கடைசி பாகத்தில் விரைவில்..............

************************நன்றி மீண்டும் சந்திப்போம்.**************************


18 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சுரேஷின் அறிவுரை அருமை... கேள்விற்கான பதில்களை விரைவில் தொடர்க...

கார்த்திக் சரவணன் said...

தடம் மாறாமல் செல்கிறது கதை... தொடருங்கள்...

உஷா அன்பரசு said...

eஎல்லாரும் நல்லாருந்தா சரி.. தொடருங்க நல்லபடியா .,

இராஜராஜேஸ்வரி said...

"இதுவும் கடந்து போகும்" --- அருமையான கதை ..பாராட்டுக்கள்..

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கதை! இடையில் வரும் அறிவுரைகள் சிறப்பு! நல்ல பகிர்வு! நன்றி!

semmalai akash said...

விரைவில் எழுதுகிறேன்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ம்ம்ம் சரிங்க, கதையின் கரு கொஞ்சம் சிக்கலானது அதனால் எதிர்பார்ப்புகள் சில நேரம் மாறலாம்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ம்ம்ம் இன்னைக்கு ஒன்னும் விளக்கம் சொல்லவில்லையே ஏன்?

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!

semmalai akash said...

எல்லோருடைய வாழ்க்கையிலும் சில சிக்கலான கட்டங்கள் வரும்போது இந்த சொல் மிகவும் துணையாக இருக்கும்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க!

semmalai akash said...

ஆமாம், நண்பரே!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

arasan said...

சிறப்பான கதை நகர்வு பாஸ்.
சில உரையாடல்கள் அப்படியே கண் முன் நிறுத்துகின்றன ..நிகழ்வுகளை .
வாழ்த்துக்கள்

உஷா அன்பரசு said...

நான் யாருக்கும் சொல்லமாட்டேன் ... இது உங்க சொந்த கதைதானே..?

semmalai akash said...

ஹலோ! ஏங்க? ஏன்? நான் நல்லாருப்பது பிடிக்கவில்லையா? விட்டா வீட்டுக்கு போன் போட்டு சொல்லிடுவிங்க போலிருக்கே! உங்க கனவு ஒன்னும் பலிக்காது:-)))))))

கதை கொஞ்சம் வித்தியாசமாக எல்லோரும் ரசிக்கும்படியும், யாரும் இதுபோல் எழுத்தாகவும் இருக்கட்டும் என்று ரொம்ப நாள் கற்பனையை எப்படியோ தத்தி குத்தி எழுதிகிட்டு இருக்கேன். நீங்கலாம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் உங்களுக்கு என் கதையைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறது. ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் நாங்களும் ஒருநாளைக்கு சாதிப்போம். ஹீ ஹீ ஹீ !!!

semmalai akash said...

நன்றி நண்பரே! பாகம் இரண்டில் நீங்க எடுத்து சொன்ன சில விஷயங்கள் இந்த பாகத்தில் சரிசெய்துவிட்டேனா? உங்களின் ஒவ்வொரு கருத்துகளும் எனது எழுத்துப் பயணத்திற்கு தூண்டுகோலாக இருக்கிறது.

மிக்க நன்றி நண்பரே!

arasan said...

உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html

Anonymous said...

வணக்கம்

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கதை நல்ல மொழிநடையில் வாசக உள்ளங்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/03/blog-post_13.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

கதை விறு விருப்பா பொய் கொண்டிருக்கும்.பொது ஒரு படம் பாக்கும் பொது கரண்டு ஆப் ஆச்சின்ன எப்படிஇருக்குமோ அப்படி இருக்கு...

இராய செல்லப்பா said...

இடைவேளைக்குப் பிறகு தியேட்டரில் நுழைந்த மாதிரி இப்போது தான் உங்கள் தொடரைப் படிக்க ஆரம்பிக்கிறேன். சுவையாக இருக்கிறது.

Post a Comment