Pages

Thursday, August 30, 2012

" என்ன வாழ்க்கைடா இது! " பாகம் 2


                நான் வந்துகொண்டிருந்தது விமானநிலையம் செல்லும் வழி சாலை, காலைநேரம் ஒன்பது மணி என்றால் சொல்லவே வேண்டாம், மிகவும் பரபரப்பான நேரம் வேலைக்கு வேக வேகமாக செல்கிறார்கள், விமானம் இரண்டு நிமிடத்து ஒன்று என கிழே இறங்கி கொண்டிருந்தது, ஒரு பக்கம் ஆம்புலன்ஸ் போய்கொண்டிருந்தது மனதுக்குள் தோன்றியது யாருக்கோ என்னவோ ஆகிவிட்டது என்று, பஸ், இருசக்கரவாகனங்கள் கார் என பலதும் அவரவர் வசதிக்கேற்ப விரட்டி கொண்டிருந்தார்கள்.இப்படி எதயாவது பார்த்து என் மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துக்கொள்ளலாம் என்று நினைத்து நினைத்து தோற்றேன்.

மீண்டும் எனது போன் ஒலிக்க, எடுத்தேன்...

ஹலோ...!!!

என்னங்க எப்படி இருக்கீங்க?

(ஆஹா! என்னவள் அவள் குரலை கேட்க்கும்போதே ஏனோ ஆயிரம் பட்டாம் பூச்சிகள் என் கண் முன்னே பறக்கும்)
ம்ம்ம்... இருக்கேன், நீ எப்படி இருக்க? சொல்லும்மா?

நான் நல்லாயிருக்கேங்க, அண்ணன் போன் செய்தார் அண்ணிக்கு  நாளைமறுநாள் வளைகாப்பு வச்சிருக்காங்கலாம், பையனுக்கு சனி ஞாயிறு விடுமுறை இருப்பதால் இன்னைக்கே வரச்சொல்கிறார், இன்று மாலை ஆபிசில் இருந்து வரும்போது அப்படியே இங்கு வருவாராம் எங்களையும் அழைத்துகொண்டு போக ... என்ன செய்யட்டும்.

சரிம்மா போய்ட்டு வாங்க... அப்படியே போகும்போது பேங்க்கும் போய்ட்டு போங்க, பணம் அனுப்பி இருக்கேன் எடுத்துகிட்டு போ... வரும்போது அப்பாவுக்கு தேவையான மருந்தும் வாங்கிட்டு வந்துடு,

சரிங்க, ஏங்க! உங்கள் குரல் என்னங்க ஒரு மாதிரியா இருக்கு? ஏன் உடம்பு சரியில்லையா?

(ஹா ஹா ஹா !!! பாருங்க இதுதான் என்னவள், என்னில் சிறிய மாற்றம் இருந்தாலும் உடனே கண்டுபிடித்துவிடுவாள், எப்படித்தான் முடியுதோ இவளுக்கு, பொய் சொன்னாலும், உண்மை சொன்னாலும் அவளுக்கு என் வார்த்தையிலையே தெரிந்துவிடும்)

ஒன்னும் இல்லைம்மா" நீங்க பார்த்து போய்ட்டு வாங்க...

சொல்லுங்க என்ன ஆச்சி? (கொஞ்சம் மிரட்டலாக...) நான் தினமும் பேசிக்கிட்டு இருக்கேனே எனக்கு தெரியாதா?

ம்ம்ம்... உன்கிட்டையா மறைக்க முடியும், எனக்கு ஒன்றும் இல்லைடா, எனது நண்பர் ராஜீவ்க்கு உடல்நிலை சரியில்லை (விபரங்கள் சொல்லி) இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கார், அங்கதான் போய்கிட்டிருக்கேன்.

அச்சோ! என்னங்க இப்படி திடீர்ன்னு, போய் பாருங்க..

ம்ம்ம்...

ஏங்க, அவருக்காவது, கூட கீதா இருந்ததால் உடனே தெரிந்து உங்களை கூப்பிட்டு ஆஸ்பத்ரிக்கு போயிட்டீங்க, உங்க கூட நான் இல்லைங்க எனக்கு பயமா இருக்கு, உங்களுக்கு ஒன்று என்றால் என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை...

ஐயோ ...மண்டு மண்டு.. என்கூட நண்பர்கள் இருக்காங்க, பயப்படாதே! சரி நான் வைக்கிறேன்...

சரிங்க...

பை பை..

"என்ன வாழ்க்கைடா இது"
 
         எவ்ளோ அன்பான மனைவி, இவளை விட்டுவிட்டு ஏன் இப்படி தனியா கஷ்ட படனும், எல்லாத்துக்கும் பணம்தான், பணம் ...பணம்..பணம்.. எவன்டா கண்டுபிடிச்சான். கூடவே அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, அம்மாவும் இல்லை அவங்க எப்பவே சாமிகிட்ட போயிட்டாங்க, அவரை யாரும் பார்த்துகொள்வதில்லை, பாவம் அவருக்கு எழுந்திருக்கவே முடியாது கூப்பிட்ட குரலுக்கு யார் போவாங்க... அக்கா ஒரு நேரம் நல்லக்குணம் இருந்தால் பார்ப்பாங்க இல்லை என்றால் கேட்காதது போலவே இருப்பாங்க, இவள் ஊருக்கு போகும் இரண்டு நாள் என் அப்பாவுக்கு நரகம்தான். நாம் இப்போது அப்பாவை பார்க்க யோசித்தால் நாளை நமக்கும் வயசாகுமே?
      இதனால்தான் நான் ஒரு பக்கம், அவள் ஒரு பக்கம். இப்படிதான் எனது வாழ்க்கை போராட்டம். அங்கு வேலை கிடைத்தது போதுமான சம்பளம் இல்லை, இங்கு வேலை கிடைத்தது கூட மனைவி இல்லை, பணமா? பாசமா? என்று எடை போட்டு பார்த்தபோது ஏனோ எப்பவும் பணம்தான் வெற்றி பெறுகிறது. மிடில்கிளாஸ் குடும்பத்தில்.

இப்படி மனதில் புலம்பி கொண்டே... போய் சேர்ந்தேன்,

"கீதா.... என்ன ஆச்சி?

நாம இல்லாத நேரத்தில் குளுக்கோஸ் தீர்ந்து போனதுகூட தெரியாமல் போய்விட்டது, இவரும் அசந்து தூங்கிட்டாராம், அந்த நேரத்தில் டாக்டர் வந்து பார்த்துட்டு பயங்கரமா திட்டிட்டாங்கலாம் நர்ஸ் மேடம் சொன்னாங்க... என்னையும் திட்டினாங்க. இன்னும் சரியாகலையாம் ஏன் தனியா விட்டீங்கன்னு கோபமா பேசுறாங்க.

"ஐயோ! அப்பறம்... என்ன சொன்னாங்க?

ஆப்ரேஷன் செய்யணும் (சொல்லும்போது கண்ணீர் வார்த்தைகளுக்கு முன் வந்தது), என்று மட்டும் அந்த நர்ஸ் சொன்னாங்க.

சரி அழாதீங்க, வாங்க ராஜீவ போய் பார்ப்போம்.

அவரை இன்னும் அரைமணி நேரம் பார்க்க முடியாதாம், நான் வந்தது முதலா இங்கேதான் இருக்கேன் நர்ஸ் சொன்னதுதான் இதெல்லாம், எனக்கு பயமா இருக்கு அதான் உங்களுக்கு போன் போட்டு கூப்பிட்டேன்.

..............................
...................
(மௌனம்.... என்னால் ஒன்னுமே பேசமுடியவில்லை)

அஜய், இப்பவே மணி 10:30 ஆயிடுச்சி, தினேஷ்க்கு எக்ஸாம் என்பதால் 12:30 வந்துடுவான், வீட்டை பூட்டிவிட்டு வந்துட்டேன், அவன் எப்படி வருவான், அப்படியே வந்தாலும் வீட்டில் நான் இல்லாததால் பெல் அடித்து பார்த்துட்டு அழுவான் என்ன செய்வது, ஒண்ணுமே புரியவில்லை இவரை பார்ப்பதா? அவனை பார்ப்பதா? வார்த்தை நின்றது...
கண்ணீர் மட்டும் ...............ஒழுகியது.

நாம யாருக்கு என்ன பாவம் செய்தோம் கடவுள் இப்படி சோதிக்கிறானே என்ற புலம்பலோடு......பாவமாக எனது முகத்தை பார்த்தாங்க, முடியவில்லை, என்னால் அவங்க முகத்தை பார்க்கவே முடியவில்லை ..
இன்னும் நேரம் இருக்கு கொஞ்சம் பொறுமையா இருங்க கீதா, எல்லாம் சரியாகும் என்று சொல்லியும், ஏனோ அவங்களுக்கு பதட்டம் குறையவில்லை, அடிக்கடி நேரத்தை பார்த்துகொண்டிருந்தாங்க ...

வாழ்க்கையில... எது இல்லை என்றாலும் வாழ்ந்திடலாம், பணம் இல்லாமல் வாழவே முடியாது என்பதுபோல் ஆகிவிட்டது, ஒவ்வொரு மனிதனும் பலவற்றை இழப்பதும் இதே பணத்தால்தான், எல்லாவற்றையும் பெறுவதும் இதே பணத்தால்தான், பணத்தினால் நாம் படும் துயரங்களை யாரிடம் சொல்லி புரிய வைப்பது, இப்படி பணத்தின்மேல் வெறுப்பாகி இருந்த எனக்கு, மீண்டும் அதே பணத்தை தேடி ஓடவேண்டி வரும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை.

         ஆம் ....ராஜீவ் அறை திறக்கப்பட்டது, டாக்டர் சொன்னார் மூச்சுவிடும் குழாயில் அடைப்பு உள்ளது(இன்னும் சில பிரட்சினைகளும்) உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று, எங்களை தனியாக கூப்பிட்டு கேட்டார் இங்கேயே செய்து கொள்கிறீர்களா? அல்லது ஊருக்கு போகிறீர்களா?  என்ன சொல்வதேன்றரியாமல் எவ்ளோ செலவாகும் என கேட்டேன் இந்த டாக்டர் மலையாளி என்பதால் எங்களுக்கு பேச வசதியாக இருந்தது, அவர் சொன்ன தொகையும் அதையும் கடந்து போகலாம் என்றார், என்னால் மட்டும் முடிவு சொல்ல முடியாது, அதேபோல் கீதாவுக்கும், கலந்து சொல்கிறோம் என்று பத்து நிமிடம் நேரம் கேட்டு சென்றேன் ராஜீவ் இடம்...

ராஜீவ பார்த்ததும் கீதா அழுகையை நிறுத்தமுடியவில்லை, ராஜீவ் இருந்த நிலை அப்படி, வாயு ஏற்றி கொண்டிருந்தார்கள், எனக்கும் ஏனோ அழுகை வர தொடங்கியது ... சமாளித்துக்கொண்டு ராஜீவிடம் விபரம் சொன்னேன், பணம் விபரம் எல்லாம் சொன்னதும் ஊருக்கு செல்வதாக முடிவு செய்தோம். டாக்டரிடம் சொல்லி அனுமதி பெற்றோம், இன்றோ அல்லது நாளையோ போகணும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து வரும் என்ற விபரமும் சொன்னார்.
 தினேஷ் வருவதற்கான நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது, டிக்கெட் ஏற்ப்பாடு செய்யனும், யார் யார் போகணும் என்று முடிவு செய்யனும், தினேஷ்க்கு எக்ஸாம் இருக்கு... பணமோ இந்த மாத செலவிற்கு மட்டுமே உள்ளது. எதுக்குமே விடை தெரியவில்லை? போயேதான் ஆகணும் என்ற நிலைமை வந்ததும் நான் புறப்பட்டேன் தினேஷ் திரும்பி வரும் நேரம்... அவனை அழைக்க அவங்க வீட்டு சாவியோடு...

   ஏன் கல்யாணம் செய்துக்கணும்? ஏன் குழந்தை பெத்துக்கணும்? ஏன் இப்படியெல்லாம் கஷ்ட படனும்? கடைசியா எதுக்காக வாழனும் என்றுகூட கேள்வி எழுந்தது. என்ன வாழ்க்கை இது? நாம் பள்ளி செல்லும்போது தெரியவில்லை, கல்லூரி செல்லும்போதும் தெரியவில்லை, அம்மாவை திட்டி திட்டி சாப்பிட்டோம்,  சாப்பாடு சரியில்லை, இது நேற்று வைத்த சாம்பார், சூடு குறைவா இருக்கு என்றெல்லாம் சொன்னோம். அப்பாவிடம் அதட்டலாய் பீஸ் கட்டனும் பணம் கொடு என்றோம், கூடவே பாக்கெட் மணியும் அடம் பிடித்து கேட்டோம்,அப்போதெல்லாம் தெரியவில்லை அவர்கள் படும் கஷ்டம், இப்போதுதான் புரிந்தது அவர்கள் எல்லாம் தெய்வங்கள்,இப்படியே கண்ணீரோடும் கவலைகலோடும் கடந்து சென்றேன் பாதைகளை, அவர் வீட்டு அருகில் சென்றேன் தினேஷ் வாய்விட்டு அழுது கொண்டிருந்தான், என்னை கண்டதும்...

அங்கிள்.....................................ம்ம்ம்ம்ம்ம்ம் ...கதறி கதறி அழுதான், ரொம்ப நேரமா யாரும் கதவு திறக்கவில்லை, அம்மா எங்கே போனாங்க என்றே தெரியவில்லை என்று சொல்லி மீண்டும் அழுதான்.

அப்படியே தூக்கி கட்டிபிடித்து முத்தம் கொடுத்து, வா சொல்கிறேன் என்று சொல்லி சமாதான படுத்தி உடை மாற்றி புறப்பட்டோம், ஆஸ்பத்ரிக்கு, போகும் வழியில் அவனுக்கு சாப்பிட சில மிட்டாய் சிப்ஸ் மட்டும் வாங்கினோம்.

கீதாவிடம், தினேஷ ஒப்படைத்தேன், கீதா இன்னும் சாப்பிடக்கூட இல்லை, நானும்தான், சாப்பிட அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு ஒரு பார்சல் கீதாவுக்கும் வாங்கி வந்தேன்.
ராஜீவ் கம்பேனிக்கு போன் செய்து விபரம் சொன்னதும்,பத்துநாள் விடுமுறை கிடைத்தது.
டிக்கெட் வாங்கணும், பணம் ஏற்பாடு செய்யனும், முக்கியமான பெரும் பிரச்சினை யார் ராஜிவ்கூட போகணும், என்பதுதான். தினேஷ்க்கு எக்ஸாம் இருக்கு. அவரை மட்டும் அனுப்பிவிட்டுவிட்டு கீதாவால் தனியாக சமாதானமாக இருக்கமுடியாது. இப்ப யார்தான் போகணும்
நானா?
தினேஷா?
கீதாவா?

தொடரும்...............

0 கருத்துகள்:

Post a Comment