Pages

Thursday, August 30, 2012

" என்ன வாழ்க்கைடா இது!" பாகம் 1

                     
     " தனிமை..தனிமை ....ச்ச! என்ன வாழ்க்கைடா இது, பகலெல்லாம் வேலை மாலை வீடு வந்தால் என்னவோ எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல் வெறுமை, வாரத்தில் 4நாட்கள் கண் விழிக்கிறேன் சூரிய உதயத்திற்கு 2மணி நேரம் முன்பு, எல்லா நாளும் கண் அடைக்கிறேன் சூரிய மறைவின் 6மணி நேரத்திற்கு பின்பு, மீதமுள்ள மூன்று நாள் காலை 8மணிக்கு பின்பு...எதுக்கு எடுத்தாலும் பணம், எங்க போனாலும் பணம் ...........பணம் .பணம் பணம்.......யாரு சார் இந்த பணத்தை கண்டு பிடிச்சது! யாரென்று தெரிந்தால் என்னிடம் சொல்லுங்களேன், அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.அவ்ளோ கோபம் சார் எனக்கு .....

என்னவோ தினம் தினம் நிம்மதியில்லாமல் பணத்திற்காக மட்டும் வேலை பார்க்கிறேன்,கொஞ்சம் மனதுக்கு நிம்மதியே மனைவியோடு பேசும்போது, நண்பர்களோடு பேசும்போது மட்டும்தான்.....அன்றும் அப்படிதான் நண்பர்களோடு பேசிவிட்டு இரவு 12மணிக்கு உறங்கினேன்.

இரவு 2:35 AM, இருக்கும், நல்ல தூக்கம் ........

"உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்...."     என்ற    

                        பாடல் ஒலித்தது, இது கனவா? நினைவா? புரியவில்லை, திரும்பி படுத்தேன் அப்பவும் ஒலித்தது, மெல்ல கண் திறக்க முயன்றேன், இமைகள் ஏனோ மறுத்தது பாடல் மீண்டும் ஒலிக்க கைகளால் அருகில் தடவி பார்த்தேன், இது கனவல்ல உண்மை எனது மொபைல் போன் ரிங்க்டோன்தான் அது, எடுத்தேன், பழக்கப்பட்ட போன்தானே அதனால் கண் திறக்காமலே ஆன் செய்தேன்,
"ஹலோ......

"அஜய்!  ....................அஜய்!.....
...............சீக்கிரம் வா, சீக்கிரம் வா........

"என்ன? என்ன ஆச்சி?....

அவருக்கு என்னவோ ஆயிடுச்சி, சீக்கிரம் வா..............சீக்கிரம் வண்டியும் கொண்டு வா............

இதோ உடனே வரேன்.....எதுவும் புரியவில்லை, என்ன செய்வதென்றே தெரியவில்லை, சாவி எங்கே? பேண்ட் எங்கே? தேடினேன்...ஓடினேன்..
அடுத்த மூன்றாவது நிமிடம் அவர்வீட்டு முன், கதவு திறந்தே கிடந்தது என் வரவை எதிர்பார்த்து ..உள்ளே சென்றேன் ஒரே அழுகை சப்தம் மட்டும் கேட்க, நானும் அலறிவிட்டேன்.

வாய் மட்டும் திறந்த நிலையில், சுவாசம் விடமுடியாமல் நெஞ்சு மட்டும் துடித்துகொண்டிருந்தது, அருகில் உதவி செய்யகூட யாரும் இல்லை, எப்படி தூக்குவது  வண்டிவரை கொண்டு செல்லனுமே? அவங்களோ செய்வதறியாமல் எதையோ எடுத்து எங்கயோ போட்டும், எனது எண்ணுக்கு பதிலாக யார் யாருக்கோ போன் செய்தும், பைத்தியம் பிடித்து கண்ணீர் மட்டும் சரியாக ஒழுக நிக்கிறார்...
அஜய்...அஜய்.. நான் என்ன செய்வேன் ஆஸ்பத்ரிக்கு போகனும் , எங்க போகனும் எப்படி போகனும் ஒன்னும் புரியவில்லை,
இங்கு என்ன நடக்கிறது எதுவும் அறியாமல் உறங்கும் எட்டுவயது குழந்தை தினேஷ், ஐயோ அவனை எப்படி எழுப்புவது, அவனை தூக்குவதா? அவரை தூக்க உதவி செய்வதா? என்று புரியாமல் தவிக்கும் கீதா.

அவரை நான் தூக்க, அவனை அவங்க தூக்க, அவசரத்தில் எதுவும் எடுக்காமல் ஓடினோம் ...வண்டியில் படுக்க வைத்துவிட்டு நான் வண்டியை விரட்டினேன், ஓரு பக்கம் மகனை தூக்கத்தில் விழாமல் பிடித்தும், கணவனுக்கு என்ன ஆச்சோ? எதுவும் ஆகக்கூடாது என்று எல்லா தெய்வத்தையும் வேண்டியும், அனைத்துபிடித்து அடிக்கடி மூக்கில் கை வைத்து பார்த்தும் சீக்கிரம் போங்க .........சீக்கிரம் போ.........என்று பதட்டத்தில் வார்த்தைகளை வீசியும் .......

"என்ன வாழ்க்கைடா இது!
               கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் ஒரு குடும்பமே துடிக்கும், தூக்க பலபேர், துணிவு சொல்ல பலர்,அந்த ஆஸ்பத்திரிக்கு போகலாம், இங்க போகலாம், ஒன்னும் ஆகாது யாரும் அழாதிங்க, நீங்க முன்னாடி வண்டியில போங்க நான் பின்னாலே வண்டியில் வருகிறேன், சரி சரி போங்க நான் மெஷினில் பணம் எடுத்துகிட்டு வருகிறேன், இப்படி பலரும் பகிர்ந்துகொண்ட காலம் எங்கேபோச்சி?
              குறைந்தது மாமனார் மாமியார் இருந்தால்கூட, நீங்க குழந்தைய பார்த்துக்கோங்க அத்தை, நானும் மாமாவும் கூட போறோம் போய்ட்டு போன் செய்கிறோம், என்று சொல்லும் காலம் எங்கே?
             ஒருவருக்கு ஒன்று என்றால், பக்கத்துவீடு அடுத்தவீடு என்று அலறலில் ஊரே ஒன்றுகூடி உதவிசெய்யும் கூட்டம் எங்கே?"

"பணத்தால் கூட்டுகுடும்பத்தை இழந்தோம், அதே பணத்துக்காக பெற்றோரையும் மறந்தோம்...இப்போ அந்த பணமும் இல்லாமல், சொந்தபந்தம் எதுவும் இல்லாமல் நிக்கிறோமே அனாதையாக "
         
இப்பவாவது உணர்வோமே நாம் செய்தது தவறு என்று...........(தவறு என்று உணர்ந்தாலும் சிலர்மனசு ஏனோ ஒப்புக்கொள்வதில்லை)

இப்படி எனக்குள் நினைவுகள் பல ஓட, வண்டி சென்று நின்றது அவசர சிகிச்சைபிரிவில், அவசர அவசரமாக அவரை தள்ளு வண்டி உதவியோடு உள்ளே அழைத்து சென்றோம். நமக்குதான் அவசரமே தவிற அவர்களுக்கு எந்த அவசரமும் இல்லை...

ஏன்? என்ன ஆச்சி?

ஒன்னும் தெரியலைங்க... திடீர் என்று மூச்சு திணறியது அரை மணி நேரமா மூச்சும் பேச்சும் இல்லை எனக்கு பயமா இருக்கு ஏதாவது செய்யுங்க,

சரி இங்க வாங்க, இந்த பாரத்தை பூர்த்தி செய்து கொடுங்க? அவர் அடையாள அட்டை ஏதாவது கொடுங்க?

"கீதா என்னை பார்த்தாங்க, நானே எல்லாத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தேன்,
பிறகு, இரத்தம், யூரின் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துக்கொண்டே இரவு என்ன சாப்பிட்டாங்க?

சப்பாத்திங்க...

பல்ஸ் ரொம்ப குறைவா இருக்கு, நீங்க கொஞ்சநேரம் இங்கேயே இருங்க என்று சொல்லிவிட்டு அவரைமட்டும் உள்ளே அழைத்து சென்றார்கள். நாங்கள் மூவரும் காத்திருந்தோம் மருத்துவரின் பதிலுக்காக... கதவு திறக்கும் ஒவ்வொரு முறையும் எங்களுக்குதான் செய்தி வருகிறது என்று எதிர்பார்த்தோம், என்ன சோதனையோ வெகுநேரம் ஆனது,

" மனித வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லாததவை, ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது, எல்லாமே பற்றாகுறை, ஆபத்துவரும் நேரத்தில் ஏனோ கடவுளை மட்டும் நம்புகிறோம், எதுவாக இருந்தாலும் அவன் செயல் என்று சொல்லமட்டும் தயக்கம் என்பதே இல்லை, வாழ்க்கை என்றால் இப்படிதான் கஷ்டம் நஷ்டம் எல்லாம் இருக்கும் என்று மனதை தேற்றி கொண்டாலும், கணவன் இழப்பு என்பதைமட்டும் நினைத்துகூட பார்க்கமுடியாதவை எல்லா பெண்களுக்கும், இப்படி நினைத்து நினைத்துதான் விடாது கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறாங்க கீதா...எனக்கோ ஆறுதல் சொல்லக்கூட முடியவில்லை, நண்பனுக்கு என்ன ஆனதோ என்ற பதட்டம் என்னை உருக்கிகொண்டு இருந்தது,

எங்களுக்கான கதவு அப்போதுதான் திறந்தது, ராஜீவ்வோட வந்தவங்க யாருங்க?

எஸ்.....எஸ்....நாங்கதான், இப்ப எப்படி இருக்கு?

ம்ம்ம்ம்.... பரவாயில்லை, சத்தமில்லாமல் வந்து பாருங்க..

கீதா மகனையும் மறந்து ஓடிய ஓட்டம் அறை எண் என்ன என்றுகூட கேட்க்காமல் ஓடினாங்க...ஓடியவேகம் திரும்பவும் வந்தாங்க ...அறை எண் என்ன? எப்படியே போகனும்? நர்ஸ் சொல்ல மறுபடியும் ஓட்டம். நான் உறங்கிகொண்டிருந்த குழந்தையை தூக்கிகொண்டு பின்தொடர்ந்தேன்... ராஜ்வ் நினைவோடு இருப்பதை பார்த்தபிறகுதான் எனக்குள் நல்லதொரு தென்றல் வீசியதுபோல் ஒரு உணர்வு, அருகில் சென்றேன், குளுக்கோஸ் ஏற்றியபடி இருந்தார் மெல்லியதாக கீதாவிடம் பேசினார் எனக்கு ஒன்னும் இல்லை பயப்படாதே என்றார், அவர்கள் கண்களாலும் மனதாலும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் கண்டவாறு பேசிகொண்டார்கள் என்னவோ ஒரு அற்புதம் நடந்துவிட்டது, கேட்டநேரத்திலும் ஒரு நல்லநேரம் எப்படியோ உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. என்பதையறிந்து சுவாசம் விட்டனர்...

அஜய் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்?

ம்ம்ம் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யனும்.

ஐயோ! அப்போ எனக்கு கையும் ஓடல..காலும் ஓடல.. உங்கள் உயிருக்கு ஏதாவது ஆயிருந்தால் என்ன செய்திருப்பேன்?

ம்ம்ம்ம் இப்படி தைரியம் இல்லாதவள திருமணம் செய்துகொண்ட என்னை செருப்பாலையே அடிக்கணும்...

இப்படியாக வார்த்தைகள் நீல ...இடையில் நான் குறுக்கிட்டு உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்துங்க, இது ஆஸ்பத்திரி வீட்டில் போய் ஒரு நல்ல முடிவு செய்யலாம். சரியாக நாலு மணி எனக்கு வேலைக்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டது, இன்று போயிதான் ஆகணும் முக்கியமான வேலை இருந்தது, ராஜீவ் நான் வேலைக்கு போய்ட்டு வரட்டுமா?

ம்ம்ம் சரி அஜய், போய்ட்டு வாங்க எனக்கு ஒன்றும் இல்லை நீங்க தைரியமா போய்ட்டு வாங்க?

என்னங்க, தினேஷ்க்கு இன்னைக்கு எக்ஸாம் இருக்கு அவனையும் ஸ்கூல் அனுப்பனும்....

சரி நீயும் கிளம்பு..அஜய் இவளை அப்படியே வீட்டில் விட்டுவிட்டு போ...

நீ மட்டும் தனியா எப்படி இருப்ப ராஜீவ்?

என்ன செய்ய நீங்களும் வேலைக்கு போகணும், தினேஷ்க்கும் எக்ஸாம் இருக்கு, அவனை அனுப்பி வைத்துவிட்டு கீதா டேக்ஸ்சி பிடிச்சி இங்க வந்துடுவா, நீங்களும் வேலை முடித்துவிட்டு வாங்க எப்ப போக சொல்றாங்களோ தெரியவில்லை, எல்லாம் நம் விதி என்று நினைத்துகொள்வோம். நீங்க போய்ட்டு வாங்க...

சரியென்று நான் புறப்பட போகும் வழியில் கீதாவையும், தினேஷையும் வீட்டில் விட்டுவிட்டு, நான் எனது அறைக்கு சென்று முகம் மட்டும் கழுவி உடைமாற்றி வேலைக்கு சென்றேன்.

"என்ன வாழ்க்கைடா இது!"

    தன் கனவனை கூட இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லை மனைவிக்கு, ஒரு நண்பனை கூட இருந்து பார்த்துகொள்ளமுடியவில்லை நண்பனுக்கு, இப்படி வேகமாக ஓடும் வாழ்க்கையில் நாம் எப்படித்தான் பொழைப்பது, எதை இழப்பது, எதை அடைவது என்று புரியாது எனது வண்டி சென்றது வேலை செய்யும் இடம்வரை...

நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை, கீதா அங்கு சென்றபிறகுதான் அவங்களுக்கே தெரிந்திருக்கிறது...
எனக்கு கீதா போனில் இருந்து ....

மீண்டும்.....
"உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
  உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்.... பாடல் ஒலித்தது....


தொடரும்...........................

1 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

Post a Comment