Pages

Thursday, February 28, 2013

எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம். பாகம் 2

வணக்கம் நண்பர்களே! முதல்  பாகத்தைப் படிக்க இங்கு . தொடர்ந்து படிக்க தொடரவும்.
பாகம் 2
      "வீட்டிற்கு வந்ததும் அம்மா கேட்டாள் என்னப்பா பொண்ணு பிடிச்சிருக்கா? எந்த பொண்ணு பிடிச்சிருக்கு? முதலில் எங்க போனீங்க? அவங்க வீட்டில் என்ன சொன்னாங்க? இப்படி பல கேள்விகள்."

    "பார்த்தேன் அம்மா முதலில் சொந்தகார பொண்ணைப் பார்த்தேன், அவங்களுக்கு நம்ம குடும்பத்தைப்பற்றி முன்னவே தெரியும் என்பதால் எந்த கேள்வியும் கேட்கவில்லை, சாப்பிட சொன்னாங்க இட்லி சாப்டேன். பொண்ணுகிட்ட என்ன செய்றீங்க என்று கேட்டேன். படிச்சிகிட்டு இருக்கேன். இப்போ கோடை விடுமுறை என்பதால் கம்ப்யூட்டர் கிளாஸ் போகிறேன், அதற்காகத்தான் கிளம்பி ரெடியாக இருக்கேன் பஸ் வந்துவிடும் நான் போகணும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது. இரண்டாவது பொண்ணு வீட்டுக்கு போனேன் அவங்க வீட்டில் யாரும் இல்லை, அதனால் எதுவும் பேசவில்லை, பொண்ணும் பக்கத்துவீட்டு அக்காவும் இருந்தாங்க, அந்த பொண்ணுக்கு நான் அந்த தெருவு பக்கம் போனதுமே அவங்க வீட்டுக்குத்தான் வருகிறேன் என்று தெரிந்து கையில் தண்ணீரோடு நின்றது. ஆச்சர்யமாக இருந்தது."

"ஓ! அப்படியா! உனக்கு எந்த பொண்ணை பிடிச்சிருக்கு? இரண்டாவது பொண்ணுக்கு உனது போட்டோ கொடுத்திருக்கேன் அதனால் இருக்கும் முதல் பொண்ணு ஒரு வகையில் சொந்தம் என்பதால் போட்டோ கொடுக்கவில்லை."

"என்ன சொல்ல அம்மா? முதலில் பார்த்த பொண்ணு ரொம்ப ஒல்லியா இருக்காங்க, அதைவிட படிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது பார்த்தால் கல்யாணப் பொண்ணு மாதிரியே இல்லை. இரண்டாவது பொண்ணு கொஞ்சம் ஆரோக்கியம் இருக்கு, ஆனால் பேசவில்லை அவங்க விபரம் எதுவும் தெரியாது இன்னொருநாள் போய் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சுரேஷ் முடித்தான்."

"சரிப்பா நாளைக்கு இன்னும் இரண்டு இடத்திற்கு போய் அந்த பொண்ணுங்களையும் பார்த்துட்டு வா, பிறகு உங்க ஒன்னுவிட்ட அக்காவீட்டுக்கும் போய்ட்டு வந்திடு, அவங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் ஏதோ தர்க்கம் அதனால் நாங்க பொண்ணைப் பற்றி எதுவும் கேட்கவில்லை, அவதான் சின்னத்தில் இருந்தே உனக்குத்தான் பொண்ணை கொடுப்பதாக சொல்லிக்கிட்டு இருந்தாள் இப்ப காலேஜ் வேற படிக்கிறாள். இப்ப பொண்ணு கொடுப்பாங்களா? அல்லது படிப்பு முடியட்டும் என்று சொல்லுவாங்களா? தெரியாது எதுக்கும் போய்ட்டு வந்திடு."

"அம்மா நான்தான் முன்னவே சொல்லிருக்கேனே அப்பாவிடம் கோபமாக பேசியவர்கள் வீட்டில் எனக்கு பொண்ணு வேண்டாம்."

"அதில்லைப்பா, அவளுக்கு நம்மளைப்பற்றி தெரியும்,ஆனால் அவங்க சொந்த பந்தங்களுக்கு நம்மளைப்பற்றி தெரியாது. அன்னைக்கு பேச்சு வாக்கில் அவளின் சொந்தத்தில் ஒருத்திதான் உங்க அப்பாகிட்ட ஒரு மாதிரி பேசுனாங்க, அதன்பிறகுதான் இவளும் தம்பி வரட்டும் பார்த்து பேசிட்டு பொண்ணு கொடுக்கிறேன் என்று சொன்னாள்."

"ஓ! இவ்ளோ நாளா என்னைப்பற்றி தெரியாதா அந்த அக்காவுக்கு, அல்லது மாவுக்குதான் தெரியாதா? அந்த பொண்ணுக்கும் என்னைத் தெரியுமே, அக்கா பொண்ணுதானே என்பதால் அதிகம் பேசவில்லை அவ்ளோதான். சரி விடும்மா, அவங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னைப் பார்க்க வருவதைப்போல் இங்கு வருவாங்க இல்லை என்றால் போகட்டும் விடுங்களேன்."

"எப்படியோ போப்பா! உங்க அப்பாவின் பிடிவாதக் குணம்தான் உனக்கும் இருக்கு. உங்க அக்கா வீட்டுக்கு அருகில் ஒரு பொண்ணு இருக்கு உங்க அக்காவுக்கு அவளை உனக்கு கட்டிவைத்தால் நல்லாருக்கும் என்று விருப்பம் அதனால் நாளைக்கு அக்கா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே அந்த பொண்ணைப்பற்றியும் விசாரித்துவிட்டு வந்திடு."

"ம்ம்ம் சரிம்மா!, அக்காவீட்டுக்கு கூட சும்மா போகக்கூடாதா? எல்லாத்துக்கும் ஒரு ப்ளான் போட்டு வச்சிருக்கியே! இந்த முறை எவ கையிலாவது என்னை பிடிச்சி கொடுக்காம விட மாட்ட போலிருக்கே!"

"இதை கேட்ட சுரேஷின் அண்ணி, ஆமாம் ஆமாம் எனக்கும் இந்த வீட்டில் தனியா போர் அடிக்குது, சீக்கிரம் கல்யாணம் பண்ணு அப்பதான் எனக்கும் ஒரு துணை கிடைக்கும். ஹீ ஹீ ஹீ !!!"

"ஓ! உங்களுக்கு துணை வேணும் என்பதற்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா என்ன? "

"ஆமாம், இல்லைனா உனக்கு வயசாகிவிட்டது என்று யாரும் பொண்ணு கொடுக்கமாட்டாங்க..:-))"

"என்ன கிண்டலா..." 

இப்படி சுரேஷ் வீட்டில் எல்லோரும் கல்யாணத்திலே குறியாக இருந்தார்கள். விடாமல் அம்மாவின் தொல்லையும், மறுநாள் காலையில் அக்காவிடம் இருந்து போன் வந்தது.

"ஹலோ அம்மா"

"ம்ம்ம், சொல்லுடி! நான் இப்பதான் உனக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன், உன் தம்பி உன்னைப் பார்க்க வருகிறான். அப்படியே நீ சொன்ன பொண்ணையும் அவன்கிட்ட காட்டிவிடு"

"ஐயோ! அம்மா அதுக்காகத்தான் நானும் போன் செய்தேன், அந்த பொண்ணோட அப்பாவுக்கு நம்ம வீட்டில் கொடுக்கத்தான் இஷ்டம், ஆனால் அவங்க அம்மாவுக்கு அவங்க சித்தப்பா மகனுக்கு கொடுக்க விருப்பம், அதனால் அவங்க வீட்டில் நேற்று பெரிய சண்டை, அதனால் தம்பி இப்ப இங்க வரவேண்டாம். அவங்க முடிவு சொன்னதும் நானே போன் செய்கிறேன்."

"ஓ!  அப்படியா! அவங்க இருவருக்கும் விருப்பம் இருந்தால் மட்டும் சொல்லு, இல்லை என்றால் வேண்டவே வேண்டாம். வேற இடம் பார்த்துக்கொள்ளலாம்." 

"சரிம்மா, இதையெல்லாம் தம்பிகிட்ட சொல்லவேண்டாம்."

"அவன்தான் பக்கத்தில் இருக்கான், சரி விடு அவனை வேறு ஊருக்கு அனுப்புகிறேன்."

இப்போதுதான்  புரிந்தது சுரேஷ்க்கு, ஒரு கல்யாணத்தில் பொண்ணுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, அவங்க வீட்டில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கணும், அதுமட்டுமில்லாமல், அவங்க சொந்தத்தில் மாப்பிள்ளை இருக்ககூடாது. என்ன கொடுமை சார். இப்படி தேடி தேடி எங்க பொண்ணைப் பார்ப்பது, அப்படி ஒரு நல்ல பொண்ணு அமைந்தால் இந்த காதல் ஒரு பக்கம் இருக்கு அதையும் விசாரிக்கனும். போற போக்கைப் பார்த்தால் காதலிக்காமல் ஒரு பொண்ணு கிடைக்க ரொம்ப கஷ்டமா இருக்கும் போலிருக்கே! குழப்பத்தில் அம்மாவிடம் சொன்னான் அம்மா நான் இன்னைக்கு எங்கேயும் போகவில்லை, வேணும் என்றால் நீங்களே போய் விசாரித்துவிட்டு வாங்க, மாப்பிள்ளையை பார்க்கணும் என்றால் மட்டும் நான் வருகிறேன். அல்லது அவர்கள் இங்கு வரட்டும், எனக்கு பொண்ணைப் பார்க்கணும் என்றால் நான் போய் பார்த்துக்கிறேன். ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா எல்லாம் நடக்கட்டும். என்று முடிவாக சொல்லிட்டான். இது மட்டுமா இதற்குமேல் ஜாதகம் குலம் கோத்திரம் என்று எல்லாம் பார்ப்பிங்களே அதையும்  பார்த்துவிட்டு ஒரு வழிக்கு வாங்க கடைசியா நான் வருகிறேன் என்று சொல்லிட்டான்.

அப்போதுதான் தன் மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்லணும் என்று தோன்றியது உடனே சந்தியாவுக்கு போன் செய்தான்.

"ஹலோ சந்தியா"

"ம்ம்ம் சொல்லுங்க மாமா, எப்ப வந்திங்க? வந்து ஒரு போன்கூட காணுமேன்னு தவிச்சிகிட்டு இருந்தேன். நல்லவேளையாக இப்ப போன் பண்ணிட்டிங்க. என்னை எப்ப பார்க்க வரிங்க?"

"ஐயோ! இங்க அம்மா தொல்லை தாங்கமுடியவில்லை! அங்க போய் பொண்ணைப் பாரு, இங்க போய் பாருன்னு தொல்லையா இருக்கு.. என எல்லாத்தையும் சொல்லி முடித்தான்."

"ஒரு கல்யாணம் என்றால் இப்படித்தான், சும்மாவா பெரியவங்க இவ்ளோ கஷ்டப் படுறாங்க."

"சரி நான் இன்னைக்கு உன்னை பார்க்கணும் எங்க வரட்டும்"

"நேரா எங்க வீட்டுக்கே வாங்க, நான் மாமியார் பசங்க மட்டும்தான் இருக்கோம். நான் அவங்ககிட்ட எங்க தூரத்து வகையில் அத்தை பையன் என்று சொல்லி சமாளிச்சிக்கிறேன் வாங்க."

"எத்தினை நாளா இப்படி யோசித்து வச்சிருக்க?"

"அதெல்லாம் எப்பவே, நீங்க வந்தா என்ன சொல்வதென்று இன்னும் பல வழி யோசித்து கடைசியாக கண்ட வழிதான் இது!"

"யப்பாப்பா! எல்லோரும் ரொம்ப விபரமா இருக்கிங்கப்பா, நான்தான் இன்னும் பழையதையே நினைச்சிகிட்டு முட்டாளா இருக்கிறேன்."

"ஹீ ஹீ ஹீ !!! , நாங்கலாம் அப்பவே உங்களை லவ் பண்ண பல பொய் சொன்னவங்க...!"

"அடிப்பாவி! அதுதான் தெரியுமே! என்கிட்டயே அப்படி வாயடிப்ப இப்ப உன் கணவர் பாவம்."

"அதெல்லாம் உங்ககிட்ட மட்டும்தான், அவர்கிட்ட ஒன்னும்பேசமுடியாதுஎதிர்த்து பேசினால் அடி உதைதான். ஐ மிஸ் யூ.. மாமா!"
(சிறிய வேதனையுடன் )

"ஏய்!..............நீதானே சொன்ன இனி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று. இப்ப நீயே இப்படி பேசினால் எப்படி?"

"மனதை எப்படி சமாதானம் செய்தாலும் இழந்த இழப்பை ஈடுகட்ட முடியவில்லை, ஒவ்வொரு செய்கையிலும் உனது ஞாபகம் வந்து வந்து போகிறது. உங்களை கல்யாணம் செய்திருந்தால் இப்படி இருந்திருக்கலாமோ என்று ஒப்பிட்டு பார்க்கிறது மனசு. நினைக்காத நாட்களே இல்லை. மறந்துவிட்டேன், மறந்துவிடலாம் என்பதெல்லாம் பொய்."

" சந்தியா! நீ இப்போ இரண்டு குழந்தைக்கு தாய், இப்படியெல்லாம் பேசக்கூடாது, நான் துபையில் இருக்கும்போது ரொம்ப தெளிவா பேசின உனக்கு இப்போ என்ன ஆச்சி?"

"தூரத்தில் இருக்கும்போது தெரியவில்லை, இப்போ அருகில் வந்ததும் மனதோடு தோற்றுப் போகிறேன். உங்களை நேரில் பார்க்கும்போது இன்னும் எப்படி பேசுவேன் என்றே தெரியவில்லை!"

"அடிப்பாவி! அப்பறம் எந்த தைரியத்தில் என்னை வீட்டுக்கு வரச்சொன்னே??"

"ஏதோ! ஒரு ........ முடியல, நீங்க என்னை பார்ப்பதற்கு முன் இறந்துவிட்டால் போதும் என்று தோன்றுகிறது. எனக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது  என்று நினைக்கிறேன் மாமா, வாங்க நேரில் மனம்விட்டு பேசணும்."

"இல்லை! வேண்டாம். எனக்கு என்னவோ உன்னை இப்போது பார்ப்பது சரியாகத் தெரியவில்லை! சந்தியா என்னை அழ வச்சிடாதே! ப்ளீஸ்மா!"

"அப்போ! என்னை பார்க்கவே வரமாட்டியா???"

"லூசா நீ, எப்படி பார்க்க வராமல் இருப்பேன், வருவேன் இப்ப வேண்டாம் அதுவும் உங்க வீட்டில் வேண்டாம் என்று நினைக்கிறேன்."

"மாமா, நான் வெளியில் தனியாக வரமுடியாது எங்கு சென்றாலும் மாமியாரை கூடவே அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் கட்டளை! அம்மா வீட்டுக்கு போனால்கூட அம்மா வந்துதான் அழைத்துக்கொண்டு போகணும், இப்படி இருக்க நான் எப்படி உங்களை பார்க்க முடியும்."

"சரி நீ எப்ப உங்க அம்மா வீட்டுக்கு வருவியோ சொல்லு அன்னைக்கு வந்து பார்க்கிறேன், தேவையில்லாமல் மாமியாரை சந்தேகப்பட வைத்துவிடாதே!" 

" சரி மாமா நான் இப்பவே அம்மா வீட்டுக்கு புறப்படுகிறேன்  மாமியார் கொண்டு வந்து விடுவாங்க, பிறகு மாமியார் போனதும்  உங்களுக்கு போன் செய்கிறேன் வாங்க, இல்லை என்றால் மதியம் சாப்பாட்டுக்கு அம்மா வீட்டுக்கு வந்துடுங்க."

"சந்தியா, நீ நல்லா யோசித்துதான் பேசுறியா, அங்க உங்க அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அண்ணன் பசங்க, தம்பி எல்லோரும் இருப்பாங்களே, அதுவும் சாப்பாட்டுக்கு வரச்சொன்னால் எப்படி நான் வருவேன், இதற்கு முன்பு வந்தேன் என்றால் நமது காதல் உங்க அம்மா, அண்ணன் அண்ணிக்கு தெரியும் என்ற தைரியம், அதுமட்டுமில்லாமல் உனது நடு அண்ணன் எனது நண்பனும்கூட இப்ப அவனும் இல்லை, எங்கேயோ வெளிநாட்டில் இருக்கான் இப்ப எந்த உரிமையில் அங்கு வருவேன், அப்படியே வந்தாலும் நல்லாவா இருக்கும்."

"யோவ்! உனக்கு என்னை பார்க்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா? இல்லையா? அதைச் சொல்லுங்க முதல்ல.."

"ஐயோ! கொஞ்சம் புரிஞ்சிக்குப்பா,"

"முதல்ல நீங்க என்னை புரிஞ்சிக்கோங்க, அம்மாதானே என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தால் அவன் முன்னாடியே நாம பேசலாம் தவறில்லை. அண்ணன் அண்ணி தனிக்குடித்தனம் போயிட்டாங்க, அப்பா வேலைக்கு போய்டுவார், நீங்க வாங்க காத்திருப்பேன் வரவில்லை என்றால் என்ன நடக்குமென்றே தெரியாது."

பதிலுக்கு காத்திருக்காமல் போன் துண்டித்தால்......

சுரேஷ்க்கு ஒன்றுமே புரியவில்லை, நாம் செய்வது சரியா தவறா? தெரியவில்லை ஆனால் அவளை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று மட்டும் மனதுக்கு தோன்றியது. சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும்துபாய் போவதற்கு முன்பு அவங்க அம்மாகிட்டதானே இன்னும் இரண்டு வருடத்தில் திரும்ப வந்து திருமணம் செய்துக்கொள்கிறேன், உங்கள் பொண்ணு தொடர்ந்து படிக்கட்டும் என்று சொல்லிவிட்டு போனோம். அதனால் அவங்க முன்னால் பேசமுடியும் ஏதாவது திட்டினால் திரும்ப வந்துவிடலாம், முதல் சந்திப்பு என்பதால் நிறைய பேச இருக்கிறது. சந்தியா கோபத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டால் என்ன செய்வது அதனால் போய்தான் ஆகவேண்டும் என்று தனது அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு இருசக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

போகும் வழியில்....(மனதில்)

(ச்சே! என்ன கொடுமையான வாழ்க்கை இது! காதல் செய்வதை அந்த பெண்ணிடம் சொல்லவே தயங்கும் காலத்தில் தைரியமாக அவளிடம் சொன்னேன், அவங்க வீட்டிலும் இருவரும் சேர்ந்தே சொன்னோம், அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கடைசியில் எங்களை பிரிக்க எப்படி அவர்களுக்கு மனம் வந்தது. ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நாம் இப்படி பொண்ணு தேடி அலையவேண்டிய அவசியம் வந்திருக்காது. இப்ப பாரு ஒரு பொண்ணைப் பார்த்தால் அவங்க வீட்டில் மட்டும் சம்மதம் சொன்னால்கூட போதாது, அவளிடமும் தனியாக பேசி காதல் ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் தைரியமாக சொல்லுங்க நானே சேர்த்துவைக்கிறேன் என்றெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கவேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன சொல்ல எல்லாம் நம் தலைவிதி என்றுதான் நினைத்துகொள்ளவேண்டும்.)

இப்படி பல சிந்தனையுடம் சுரேஷ் இருக்க வண்டி அவளது ஊரில் சென்று நின்றது.சட்ரென்று பிரேக் அடித்து நிறுத்தினான். இதுவரை இருந்த தைரியம் ஏனோ இப்போது காணாமல் போனது. போயிதான் ஆகணுமா என்று யோசித்தான். சந்தியா வந்திருப்பாளா? அவங்க அம்மா ரொம்ப கோபப்பட்டு திட்டிவிட்டால் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான். 

சந்தியாவுக்கு போன் போட்டான். ஆனால் அவள் எடுக்கவில்லை, எடுத்தால் எங்க ஏதாவது காரணம் சொல்லி எஸ்கேப் ஆகிடுவானோ என்கிற பயத்தில் சந்தியா இவனது போனை எடுக்கவில்லை. திரும்பவும் போன் செய்தான் "ம்ம்கும்" எடுக்கவில்லை, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான் பதில் இல்லை, கடைசியாக ஒரு மெசேஜ் வந்தது நான் வந்து ஒருமணி நேரமாகுது உங்களுக்காக காத்திருக்கேன் சீக்கிரம் வாங்க அவ்ளோதான் சொல்வேன்.

இதைப்  படித்த சுரேஷ்க்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும், உசுரே போனாலும் போகட்டும் என்று துணிச்சலுடன் அவளது வீட்டின் அருகில் சென்று வண்டியை நிறுத்தினான்.  தயங்கி தயங்கி வீட்டின் வாசல்படியில் கால் வைக்க முயன்றான் அப்போது ஒரு குரல்....

"அம்மா நம்ம வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க...!"

"....(ஏதோ சவுண்ட் ஆனால் கேட்கவில்லை)"

சுரேஷ் காத்திருக்காமல் உள்ளே செல்ல....

"வா, சுரேஷ். துபையில் இருந்து எப்ப வந்தே?"
(சந்தியாவின் அம்மா, கையில் ஒரு குழந்தையோடு)

வந்து இரண்டு நாட்கள் ஆகிறது அத்தை, அக்கா வீட்டுக்கு போகலாம் என்றுஇந்த வழியாக வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வீட்டிற்கு வந்தேன். 

"ஓ! அப்ப எங்களை பார்க்கவரவில்லை அப்படித்தானே!" 

"உங்களையும் பார்க்கத்தான், உங்க ஞபகம் இல்லையென்றால் இங்கு வந்திருப்பேனா?"

"ம்ம்ம், சுரேஷ் இந்த பசங்க இருவரும்தான் சந்தியாவின் பசங்க. இதோ இவனைப்பாரு அப்படியே அவங்க அம்மா மாதிரியே!" 

இந்த  வார்த்தையை கேட்டது சுரேஷ் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் அந்த குழந்தையை கையில் வாங்கி அப்படியே அணைத்துக்கொண்டான். 

" அத்தை சந்தியா இல்லையா?"

"வந்திருக்கா!  அவளும் இப்பதான் வந்தா அடுப்புகிட்ட புள்ளைக்கு பால் சுடவைத்துக்கொண்டு இருக்கிறாள், இருப்பா கூப்பிடுகிறேன்."

சந்தியா................
 சந்தியா........

சுரேஷ் மனதில் ஒரு பதற்றம், கை கால் தானாகவே நடுங்க ஆரம்பித்தது, அவளிடம் முதன் முதலில் தனது காதலை சொன்னப்போதுகூட இப்ப டென்ஷனாக இருந்ததில்லை,  கொலுசு சத்தம் கேட்டது ... இதோ வருகிறாள் வருவது அவள்தான் முதல் வார்த்தை என்ன பேசுவது, எப்படி இருக்கும் அவளது ரியாக்ஷன், அவங்க அம்மா என்ன நினைப்பாங்க..புரியாமல் தவித்தான்.

ஆனால் சந்தியா சாதாரணமாகவே தொடர்ந்தாள் ...

"வாங்க மாமா, எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க? இப்பதான் எங்க ஞாபகம் வந்ததா?" இப்படி விடாமல் பல கேள்விகளை அடுக்கினாள்...

"நல்லாருக்கேன் சந்தியா, வந்து இரண்டுநாள் ஆகுது."

அருகில் வந்து குழந்தையை வாங்குவதைப்போல், அதுதான் தெரியுமே என்று காலை மிதித்தாள், இவனுக்கு என்ன பெயர் தெரியுமா? சுரேஷ் குமார்.என்று சொல்லிவிட்டு ஒரு நமட்டு சிரிப்போடு குழந்தையை குழந்தையை கையில் வாங்கினாள்.

சுரேஷ்க்கு மனதில் சிறிய சந்தோஷம் என்றாலும் இவள் எப்படி சமாளிக்கிறாள் என்று வியப்பாக இருந்தது, எவ்வளவு தைரியமாக சுரேஷ்குமார் என்று பெயர் வைத்திருக்காளே, இதற்காகவும் அடி வாங்கிருப்பாளோ? இவள் இன்னும் மாறவேயில்லை, இரண்டு குழந்தைகள்தான் ஆகிவிட்டதே தவிர ஒரு மாற்றமும் இல்லை, சற்று தடித்திருந்தாள். இப்படி இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்ற சுரேஷ்க்கு அடுத்த கேள்வியும் வந்தது.

"என்ன மாமா, துபாய் போய்ட்டு வந்ததும் முன்னமாதிரி பேசமாட்டேன்ங்குரிங்க, என்ன கொஞ்சம் குண்டான மாதிரி இருக்கு, தொப்பையெல்லாம் வந்திருக்கு, பார்க்கவும் ஹீரோ மாதிரி இருக்கீங்க? அதனால எங்ககிட்ட பேச கவுரவம் பார்க்கிறிங்களா?"

"அப்படியெல்லாம் இல்லை சந்தியா!" 

அதற்குள் அவளின் அம்மா கையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து கை கழுவிகிட்ட வாப்பா சாப்பிடலாம் என்று சொன்னாள்.

"ஐயோ! வேண்டாம் அத்தை இப்பத்தான் சாப்பிட்டுவிட்டு வந்தேன், நான் அக்காவீட்டுக்கு போகணும் புறப்படுகிறேன் அத்தை."

சந்தியா ஒரு பக்கமிருந்து கண்களாலும், கை சைகைகளாலும் மிரட்ட...

"இந்த வெயிலில் எங்கப்பா போற, கை கழுவிக்கிட்டு வா கொஞ்சமா சாப்பிடு என்று சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் போனால்."

"மாமா இங்க வந்து உட்க்காருங்க."

"ஏய்! வேண்டாம் நீ இப்பவே அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி கொடுக்கிறாய் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. நீ சும்மா இரு நான் புறப்படுகிறேன் இன்னொரு நாளைக்கு வருகிறேன்."

"(அழுகையோடு) ஏன் என்னைப் பிடிக்கவில்லையா?"

சுரேஷ்க்கு அப்படியே அவளை கட்டிபிடித்து அழனும்போல் தோன்றியது, எதுவோ தடுக்க கையேடு கையை பிசைந்துகொண்டு இருக்கையில் உட்கார்ந்திருந்தான், ஆனால் சந்தியா தனது குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு அவனது தோலில் வந்து சாய்ந்துக்கொண்டாள்.


தொடரும்.....

*****************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.*****************************

26 கருத்துகள்:

குட்டன்ஜி said...

இயல்பான நடை!கதை கொஞ்சம் சிக்கலாகுதே!அருமை
கொஞ்சம் நீளத்தைக் குறைக்கலாம் என எண்ணுகிறேன்!
த.ம.1

”தளிர் சுரேஷ்” said...

கதை கொஞ்சம் நீளம்! பொறுமை தேவைப்படுது படிக்க! குட்டன் சொன்ன மாதிரி தடம் மாறுதோன்னு தோணுது! தொடர்கிறேன்! நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

அருகில் வந்து குழந்தையை வாங்குவதைப்போல், அதுதான் தெரியுமே என்று காலை மிதித்தாள், இவனுக்கு என்ன பெயர் தெரியுமா? சுரேஷ் குமார்.என்று சொல்லிவிட்டு ஒரு நமட்டு சிரிப்போடு குழந்தையை குழந்தையை கையில் வாங்கினாள்.

சிக்கலின் ஆரம்பம் ...

arasan said...

வணக்கம் பாஸ் ..

ஒரே மூச்சில் இரண்டு பகுதியையும் படித்துவிட்டேன் ...

முதலில் இது கற்பனை அல்ல, இது ஒரு உண்மை சம்பவமாகத்தான் இருக்கணும் ..
அடுத்து உரையாடல்கள் என்னவோ மனசுக்குள் ஒட்டவே இல்லை ... பிரிந்து போன காதலர்கள் இவ்வளவு இயல்பாக பேசி இருக்க முடியாது ... முதல் பகுதியை முடிக்கு முன்னரே மனசு கனத்திருக்க வேண்டும் .. ஏதோ அவசரத்தில் போட்ட பதிவு மாதிரி உணர்வை தருகிறது ...
அடுத்து இரண்டாம் பகுதியில் சுரேஷே எல்லார் வீட்டுக்கும் பொண்ணு பார்க்க போவது மாதிரி சொல்லி இருந்திர்கள் , அதுவும் ஒரு நெருடலை தான் தருகிறது ... எங்கே மாப்பிள்ளை மட்டும் பெண் பார்க்க செல்கிறார் ...

என்னடா வெறும் குறையை மட்டும் குரிப்பிடுகிறான் என்று வருந்த வேண்டாம், நல்ல படைப்பாளி தான் சொல்ல வந்ததை அழுத்தந்திருத்தமாய் படிப்பவரை ஒரு நிமிடம் உறைய வைக்க வேண்டும். அந்த மாதிரியான ஒரு கருவை தேர்ந்தெடுத்து விட்டு இப்படி இயல்பாய் செல்வதை எடுத்துரைக்க தோன்றியது... வருத்தம் இருப்பின் மன்னியுங்கள் ... தீரவில்லையெனில் போனில் அழைத்து கூட திட்டலாம் .. எண் - 9952967645

கார்த்திக் சரவணன் said...

அருமையான எழுத்து நடை... கொஞ்சம் நீளம்... அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவல்...

கவியாழி said...

அதிக நீளம் ஆனாலும் ஆழமான கதை

திண்டுக்கல் தனபாலன் said...

கதை வேறு எப்படியோ போகுதே... ...ம்...

semmalai akash said...

நீளம் அதிகம்தான் நண்பா, கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று விரிவாக எழுதுகிறேன். ஹா ஹா ஹா !

உங்களுக்கு படிக்க சிரமம் கொடுத்ததற்கு மன்னிக்கவும் நண்பா, இன்னும் இரண்டு பாகம்தான் பொறுத்துக்கொள்ளவும் ப்ளீஸ்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

சிரமத்திற்கு மன்னிக்கவும் நண்பரே!, மனதில் சொல்ல நினைத்ததை முழுமையாக சொல்லாலாம் என்று புதிய முயற்சி, கதை எப்படி போகிறதென்று பொறுத்திருந்து பாருங்கள் நண்பரே!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ஹா ஹா ஹா !!! ரொம்ப ஆழமாக கதையை படித்து வருகிறீர்கள் என்று தெரிகிறது சகோ! தொடர்ந்து படியுங்கள். நான் எடுத்துக்கொண்ட கதையின் கருவும் மிக சிக்கலானது அதனால்தான் இப்படியெல்லாம் போகிறது.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ!

semmalai akash said...

ஐ லைக் யூ நண்பா,

உங்கள் கருத்துகளை சொல்ல எதுக்கு நண்பா திட்டப்போகிறேன், பதிவில் படிப்பவரை உருகவைக்க முடியவில்லை என்பது நூறு சதமானம் உண்மை நண்பா, கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதுகிறேன் அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

எனது கதைகள் எப்பவும் உருக்கமாக இருக்கிறது என்று ஒரு குறையும் இருக்கிறது அதனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காக இந்த கதையை இயல்பாகவே கொண்டு செல்கிறேன். சொல்ல நினைத்ததை முழுமையாக எல்லோரும் புரிந்துக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

ஆனால் இந்த கதையை படிப்பதற்காக நிறைய நண்பர்கள் வந்திருக்கிறார்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

எங்க ஊர் பக்கமெல்லாம், பொண்ணுப் பார்க்க நண்பர்களுடம் போய் பார்ப்பது வழக்கம் அதைதான் சொல்லிருக்கிறேன் நண்பா.

உரையாடல்கள் மனதுக்கு ஓட்டவில்லையா??? இதில் எப்படி மாற்றம் வருத்துவது என்று யோசிக்கிறேன் நண்பரே! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய இந்த பின்னூட்டம். மகிழ்ச்சி.

கண்டிப்பாக போன் செய்வேன் திட்டுவதற்கில்லை. பயப்படவேண்டாம் :-)))))))

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

அடுத்த பதிவும் கூடிய சீக்கிரமே வரும் நண்பரே! நான் இதுவரை உங்களுடைய வலைப்பதிவு பக்கம் வந்ததில்லை என்று நினைக்கிறேன். வருகிறேன் நண்பரே!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ஆஹா! வாங்க வாங்க, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய வருகை!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

அடுத்த பதிவில் தெரியும் எப்படி போகிறதென்று... ஹா ஹா ஹா !!!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

RajalakshmiParamasivam said...

சந்தியா கேரக்டரை கெடுக்காதீர்கள் ஆகாஷ் . ப்ளீஸ்.....

semmalai akash said...

சகோ! கதையின் கரு கொஞ்சம் சிக்கலானது, என் மனதில் உள்ளதை சொல்லியே ஆகவேண்டும், அதனால் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும், ரொம்பநாள் இழுக்கமாட்டேன். இன்னும் இரண்டு பதிவில் முடிந்துவிடும். ஒரு கிராமத்துக் காதல் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் சகோ?

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ!

ezhil said...

கதையை கொஞ்சம் எடிட் செய்தால் போதும் இன்னம் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்... சில பேராக்களை படிக்காமலே தள்ளிவிட்டேன்.... குறு நாவலாகிவிடும் அபாயம் .....

semmalai akash said...

ஆஹா! உங்களுடைய வருகை ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருடைய கருத்துகளையும் ஏற்று அடுத்த பதிவில் மாற்றம் வருத்துகிறேன்.

உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.

சசிகலா said...

ஆமாங்க எனக்கும் சந்தியா கேரக்டரை வேற எப்படியோ மாத்துற மாதிரி தோனுது வேண்டாமே ?

semmalai akash said...

கொஞ்சம் பொறுங்கோ! விரைவில் தெரியும்,


தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Unknown said...

super sir thank you sir

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.

உஷா அன்பரசு said...

அரசன்.சே சார் சொல்லியிருக்கிறதுதான் நானும் சொல்ல வந்தது. தொடர வேண்டாம் i mean சந்தியாவும், சுரேஷூம்...!
( கற்பனை கதையை நிஜம் போல எழுதரது தனி.. ஆனா நிஜத்தை எழுதரப்ப.. நிஜமா தோணாம கொஞ்சம் கற்பனை கலக்கனும்.. மாட்டிக்கிட்டிங்க...?! ( கதை களம், இடம் , காலம்..)

Unknown said...

அருமையான நடை நண்பரே...... நான் நேரில் அந்த காட்சிகள் நடப்பதை பார்ப்பது போல இருந்தது ! தொடர வாழ்த்துக்கள்.....

semmalai akash said...

ஹா ஹா ஹா !!! விட்டா இது என்னுடைய சொந்த கதை என்று சொல்லிடுவிங்க போலிருக்கே! கதையின் கரு கொஞ்சம் குழப்பமானது என்பதால் சொல்வதை விளக்கமாக சொல்லலாம் என்று எழுதினேன்.

வீட்டுக்கு போன் போட்டு சொல்லி குடும்ப கலவரத்தில் ஈடுபட்டுடாதிங்க :-))))))))

semmalai akash said...

மிக்க நன்றி நண்பரே!

உங்களுடைய வருகைக்கும் ஊக்கமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி .

Post a Comment