Pages

Sunday, November 18, 2012

"மனிதனின் மனம்" எதிலும் திருப்தி அடைவதில்லை.

"மனிதனின் மனம்" எதிலும் திருப்தி அடைவதில்லை. 
"இக்கரைக்கு அக்கரை பச்சை!" என்கிற சொல்வாக்குதான் ஞாபகத்துக்கு வருகிறது. இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை என்று எப்பவும் மனம் எதையோ தேடி அலைகிறது. அப்படியே ஏதாவது பொக்கிஷம் கையில் கிடைத்துவிட்டாலும், அதனை கையில் வைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மற்றொன்றுக்கு மனம் தாவுகிறது. அதைவிட, இது பெட்டர் என்று மனம் சமாதானமடைந்தால்தான் அந்த இடத்தைவிட்டு நகர்கிறது. கிடைத்தப் பொருளை ஒருநாள்கூட முழுமையாகப் பயன்படுத்தமாட்டோம். அதற்குள் மனம் வேறு ஒன்றுக்காக ஏங்க ஆரம்பித்துவிடுகிறது.

சாதரணமாக காய்கறி வாங்கும் கடையிலிருந்து தொடங்குகிறது, கொட்டிக்கிடப்பது நல்லதாக இருந்தாலும், சாக்குப்பையில் இருப்பதே நல்லதாகப்படும். ஒருக்காயை கையில் எடுத்துக்கொண்டு கிழே இருக்கும் மற்றொரு காயை பார்த்து, அதுக்கு இது பெட்டராக இருந்தால்தான் எடுப்போம்.

ஆடை  வாங்கப்போனால் அப்படிதான், சும்மா ஒரு சட்டை எடுப்பதற்காக கடைக்கு போவோம். அங்குள்ள அத்தினை உடைகளைக் கண்டு, மனம் குரங்குனைப் போல அங்குமிங்குமாக தாவிக்கொண்டிருக்கும். சரியான முடிவெடுக்க முடியாமல், கடைசியில் நேரம் இல்லாததால் ஏதோ ஒன்றை தேர்வு செய்கிறது. அப்படி தேர்வு செய்த சட்டையைப் போடும்போதும்கூட அங்க பார்த்த இன்னொரு சட்டையை நினைத்து மனம் ஏங்கும்.

இந்தமாதிரி விசயத்தில் ஆண்களும், பெண்களும் ஒரேபோலத்தான், பெண்கள் சில விசயங்களில் ஒருபடி மேல் இருப்பார்கள். ஆண்கள் எதையும் வெளியில் சொல்வதில்லை, பெண்கள் வெளியில் சொல்லிவிடுகிறார்கள் இதுதான் வித்தியாசம்.

"துள்ளாத மனமும் துள்ளும்" படத்தின், இன்னிசைப்பாடி வரும்... பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.

"இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் 
அதைத் தேடித்தேடி தேடும் மனம் தொலைகிறதே!" என்ற வரிகளிதான் எத்தினை உண்மை.


புதியதாக  வேலைக்கு சேர்ந்து முதல் மாதம் சம்பளம் வாங்கும்போதுகூட, நம்மோடு வேலைப்பார்ப்பவர்களுக்கு என்ன சம்பளம் இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள மனம் ஏங்குகிறது, தெரிந்துவிட்டால் அவனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சம்பளம், நமக்கு இல்லையே என ஏங்கும் மனம், அங்கும் திருப்தியடைவதில்லை. அவர்கள்மீது அவசியமில்லாமல் கொஞ்சம் பொறாமையும்.

அலுவலகம் சென்றால், அங்கு அருகில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் ஏனோ மனம் உற்று பார்க்கிறது, சில நேரம் அவர்கள் எது செய்தாலும் பிடிப்பதில்லை, பொறாமையும் கூடவே வளர்கிறது. நமக்கு மட்டும் இப்படி தோன்றவில்லை, எல்லோருக்கும் அப்படிதான் தோன்றுக்கிறது. புதியதாக ஒன்றை செய்யவேண்டும் என்றால் அதை அடுத்தவர்களுக்கு சொல்லிக்கொடுக்க மனம்வருவதில்லை, அவனுக்கு முன் அதை செய்துவிடவே துடிக்கிறது. 

நாம் முதலாளியிடம் கொஞ்சம் நேரம் தனியாக பேசிவிட்டால்போதும்  எதிரில் இருப்பவன், நம்மளை எதிரியாக பார்க்கிறான். இரண்டு நாட்கள் பேசாமல்கூட இருந்துவிடுகிறேன். 

ஒரே கம்பேனியில் தனித்தனி  பிரிவில் வேலைப்பார்ப்பவர்கள் ஒரு அறையில் தங்கிருந்தால், நேரம் வேறுபாடும், சிலருக்கு எளிமையான வேலையும், சீக்கிரமும் முடிந்துவிடும், அதைக்கண்டால் அவன் என்னவோ வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவதைப்போல ஒரு பார்வை பார்க்கத் தோன்றுகிறது. 

இப்படி அழகான ஆடையில் தொடங்கி, அழகான பெண்கள் வரை, ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப்பார்த்து, இதைவிட அதுவா? அதைவிட இதுவா? என ஏங்கி ஏங்கியே மனம் எதிலும் திருப்தியடைவதில்லை. 

சில நன்மைகள்:

  • இப்படி சில ஏக்கங்கள் இருந்தால்தான், அந்த இலக்கை நாம் எளிதில் அடையமுடியும்.
  • இப்படி சில பொறாமைகள் இருந்தால்தான், அந்த இடத்தை நாம் நெருங்க முடியும்.
  • நல்லதை தேர்ந்தெடுப்பதில் தப்பில்லை, அப்போதுதான் நம் திறமையை வெளிப்படுத்தமுடியும்.
  • எட்டாத சில இடத்திற்கு ஆசைப்பட்டால்தான், எளிதில் எதையும் சாதிக்கமுடியும்.
தீமைகள்:
  • இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
  • எங்கும் எதிலும் சந்தேகம் நிலைநாட்டுகிறது.
  • மறதி ஏற்படுகிறது.
  • மனதிற்கு நிம்மதி இல்லாமல் போகிறது.
(நான் கண்டறிந்த சிலவற்றை கூறியுள்ளேன். உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும்)

 

9 கருத்துகள்:

துளசி கோபால் said...

உண்மைதான்!!!!

வேகநரி said...

பதிவு பிடித்திருக்கிறது. நல்லதை தேர்ந்தெடுப்பது அவசியம் என்று நம்புகிறேன்.

semmalai akash said...

நன்றிங்க..

semmalai akash said...

ஆமாம், கண்டிப்பாக..
வருகைக்கு நன்றிங்க.

வெற்றிவேல் said...

உண்மைதான்... வாழ்வில் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்... ஆனால் அதுவும் ஒரு எல்லை வரை மட்டுமே... நம் தேடலுக்கான எல்லையையும் நாம் நல்லதை தேர்ந்தெடுக்க வேண்டும்... அருமையான பதிவு...

semmalai akash said...

கருத்துக்கு நன்றி நண்பரே!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான சிந்தனை..

இப்படி அழகான ஆடையில் தொடங்கி, அழகான பெண்கள் வரை, ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப்பார்த்து, இதைவிட அதுவா? அதைவிட இதுவா? என ஏங்கி ஏங்கியே மனம் எதிலும் திருப்தியடைவதில்லை.

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

semmalai akash said...

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

சசிகலா said...

பதிவை படித்ததும் திருப்தி கிடைத்ததுங்க. நன்றி.

Post a Comment